Sunday, September 21, 2008

என் காதல் கவிதைகள் - தெரியவில்லை, புரியவில்லை

பிரிவில் வாடும் காதலன் தன் ஏக்கம் வெளிப்படுத்தும் பாடல்.

தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை
மனக்கண்முன்னே நிற்கும் கனிமுகத்தை
என்முன்னே கொண்டு வரத்தெரியவில்லை
(தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை)

காற்றோடு தூது சொல்ல பாஷை தெரியவில்லை
மாயமந்திரம் ஏதும் அறியவில்லை
(தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை)

அந்த இனிய முகத்தை வரையத்தெரியவில்லை
சிலை வடிக்கும் திறனுமில்லை

தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை
மனக்கண்முன்னே நிற்கும் கனிமுகத்தை
என்முன்னே கொண்டு வரத்தெரியவில்லை
(தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை)

No comments:

Post a Comment