Friday, September 19, 2008

என் இனிய தமிழ்

என் தமிழ் Blog-ஐ கவி கண்ணதாசனின் வரிகளுடன் ஆரம்பிக்கிறேன்.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

மெய், வாய், கண், மூக்கு, செவி அனைத்திற்கும் ஓர் அற்புத விருந்து. நெஞ்சை நெகிழ வைக்கும் இசைஅமைப்பு மற்றும் உணர்ச்சிகளைப் பிழியும் பின்னணிக்குரல்கள்.

இந்த அருமையான பாடலை நான் பலமுறை நண்பர்களோடு பாடியிருக்கிறேன். கண்ணதாசனின் கவிதைகளை ஆராய்ந்து அனுபவிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.

No comments:

Post a Comment