Friday, September 19, 2008

என் காதல் கவிதைகள் - சும்மா சும்மா

எழுதும்பொழுதே மெட்டமைத்துப்பாடுவது ஒரு தனி சுகம். காதலிக்கு சுதந்திரமும் தைரியமும் தரும் காதலனின் பாட்டு. கிராமிய பாணியில் பாடிப்பாருங்கள்.

சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு
சொகமா விஷயம்
ஜொரம் வந்தா வரட்டும்
சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு

பூட்டுப்போட்ட வீட்டுக்குள்ள
புகுந்துடலாம் கஷ்டமில்ல
மனச மட்டும் பூட்டிப்புட்டா
புரிஞ்சுக்க ஒரு வழியுமில்ல
(சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு)

நினைப்பதொண்ணு உரைப்பதொண்ணு
நிறம் மாறும் உள்ளங்கள் உண்டு
நல்ல மனதில் வளர்வதெல்லாம்
நல்லதாத்தான் இருக்கும் பொண்ணு

சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு
சொகமா விஷயம்
ஜொரம் வந்தா வரட்டும்

சும்மா சும்மா சும்மா சொல்லு
சொல்லறத நீ சட்டுனு சொல்லு

No comments:

Post a Comment